Tuesday, 28 February 2017

பொது நலம் கருதி பாமக சார்பில் மதுக்கடை வழிகாட்டிப் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்- மருத்துவர். அன்புமணி

பொது நலம் கருதி பாமக சார்பில் மதுக்கடை வழிக்காட்டிப் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்       
        -மருத்துவர். அன்புமணி

மது எனும் அரக்கனை நாட்டை விட்டே விரட்ட கடுமையான போராட்டங்களுக்கு பிறகு சட்டரீதியாக உச்சநீதிமன்றம் வரை சென்று தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட பாமக மூலம் தீர்ப்பு கிடைத்தாலும், தமிழக அரசு அந்த தீர்ப்பை மதிக்கவில்லை..
ஏழை எளிய உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இந்த மதுக்கடைகளை அகற்ற  முதற்கட்டமாக  அந்த கடைகளின்  வழிகாட்டி மற்றும் அறிவிப்பு பலகைகள் மீது உச்சநீதிமன்றத் தீர்ப்பை விளக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போராட்டம் தமிழகம் முழுவதும் நாளை மார்ச் 1ஆம் தேதி நடக்க இருப்பதால், இதை ஒரு கட்சியின் போராட்டமாக கருதாமல் நம் நாட்டின் கொடிய பிரச்சனையாக கருதி அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

#AnbumaniProtest #BanTasmac #SavePeople #ScVerdict

No comments:

Post a Comment