Saturday, 30 July 2016

ஆண்களே! - பெண்களை வசிகரிக்கும் அழகுக் குறிப்புகள் உங்களுக்காக பகுதி 2

நல்ல மாய்ஸ்சுரைசர் 

தினமும் இரண்டு முறை சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டியது அவசியம். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதில் பகலில் நீர்மமான மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும். 


பழங்கள் மற்றும் காய்கறிகள் அடிக்கடி டீ, காபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே அழகை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள். 

உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்


 உணவின் சுவையை அதிகரிக்க உப்பு, சர்க்கரை போன்றவை அவசியம் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக உப்பை தவிர்த்திடுங்கள். ஏனெனில் உப்பு முகத்தை வீங்கச் செய்யும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிடுங்கள். 

நல்ல தூக்கம் முக்கியமாக இரவில் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் தான் பாதிக்கப்பட்ட சரும செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் அந்த ஓய்வு சரியான அளவில் கிடைக்காவிட்டால், முகம் பொலிவிழந்து தான் காட்சியளிக்கும்.

வயிறு உபாதை நாக்கு புண் கண் ஏரிச்சல்

அகத்தி கீரை

வயிறு உபாதை
வயிற்று உபாதைகள் குறைய வயிற்று உபாதைகள் குறைய அகத்தி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் குறையும்

நாக்கு புண்

. நாக்கில் ஏற்படும் புண் குணமாக நாக்கில் ஏற்படும் புண் குணமாக அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட நாக்கில் புண் குணமாகும்.

கண் ஏரிச்சல்
கண் எரிச்சல் குறைய அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து சாறு பிழிந்து அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பிறகு தேங்காய் பால் சேர்த்து கலக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

Friday, 29 July 2016

வீரபாகுவின் பெருந்தன்மை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது. தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர். ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, “மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், “முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது” என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து “நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!” என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது. உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான். “ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். அதற்கு நீலிமா, “திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை” என்றாள். “இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!” என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். “முடியவே முடியாது!” என்று நீலிமா கூச்சலிட, “நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!” என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான். ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான். அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், “வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!” என்றான். நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். “உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!” என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர். அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர். கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது. கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான். அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், “நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்! இந்த வாய்ப்பை நழுவ விடாதே!” விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான். பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, “பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!” என்றார். உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, “என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்” என்றாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, “இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன். கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்” என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான். ” இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம். தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான். அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது. அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள். அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினாள். வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள். ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

திருந்துவோம்


ஒருவன் உங்களுக்கு ப்ரெண்ட் ரிக்வோஸ்ட் அனுப்புகிறான், அவனை உங்களுக்கு தெரியாது, ஆனால் அழகான படத்தை அவன் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளான். அதனால நீங்க அவனை ப்ரெண்ட்டா அக்ஸப்ட் பண்ணுறீங்க..

உங்கள் சின்ன குழந்தையின் பள்ளி முதல் நாள் அது. அவள் மிக மிக அழகாக உள்ளாள் அவளின் புது பள்ளி சீருடையில். நீங்கள் அவளை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களும் குடும்பமும் பார்ப்பதற்கு போஸ்ட் பண்ணுறீங்க.

உங்களை குழந்தையை விட நீங்கள் குதூகலமாக உள்ளீர்கள். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு பேஸ்புக்கில் பள்ளியின் முகவரியில் 'செக் இன்' பண்ணுறீங்க. நம்பவே முடியவில்லை என் குழந்தை எவ்வளவு பெரிதாகிவிட்டாள். நாங்கள் பெருமையான பெற்றோர் என ஸ்டேட்டஸ் கூட போடுறீங்க .

அதே சமையம் நீங்கள் என்றோ ப்ரெண்ட்டாக சேர்த்த அந்த மர்ம நபர், பள்ளி சீருடையில் அழகாக உள்ள உங்கள் குழந்தையின் படத்தை அவன் போனில் டவுன்லோட் செய்கிறான். டவுன்லோடு செய்த கையேடு அதை அவனை போல 60 திருடர்களுக்கு அனுப்புகிறான்.

இந்திய பெண் வயது : 5
கருப்பு கூந்தல்
கருப்பு நிற கண்கள்
RS:70,000/-

நீங்கள் உங்கள் குழந்தையின் படத்தை மட்டும் குழந்தை திருடர்களுக்கு கொடுக்கவில்லை, குழந்தையின் பெயர் அவளின் பள்ளி முகவரி அனைத்தையும் வெள்ளித்தட்டில் வைத்து நீட்டி உள்ளீர்கள்.

மதியம் 3 மணிக்கு குழந்தையை அழைத்துவர பள்ளிக்கு செல்கிறீர்கள். ஆனால் குழந்தையை பள்ளியில் எங்கும் காணவில்லை.

உங்களுக்கு தெரியாதது, உங்களின் செல்ல மகள் 43 வயது கிழட்டு காமுகனுக்கு விற்கப்பட்டது அதுவும் நீங்கள் காலையில் பள்ளியை விட்டு வெளியேறும் முன்பே விற்கப்பட்டது. அவள் இப்போது ஒரு பையில் அடைக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்துக்கொண்டிருக்கிறாள். குழப்பமான பயத்துடன் அழுதுகொண்டே செல்கிறாள். இன்று அவளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ஆளை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது அவளுக்கு அவளின் பெற்றோர் இருக்குமிடம் தெரியாது. எங்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்பது தெரியாது, அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியாது.

* தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் இணைக்காதீர்கள்.
* உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.
* உங்கள் குழந்தையின் படங்களை ப்ரொபைல் பிச்சராக வைக்காதீர்கள்.

இதை குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நன்மைக்கு உங்களுக்கு தெரிந்தவர்களுடன் ஷேர் பண்ணுங்கள்.
இந்த பதிவை பகிர்வதை நிறுத்தாதீர்கள்.. விழிப்புணர்வை பரப்புங்கள் !

ஆண்களே! - பெண்களை வசிகரிக்கும் அழகுக் குறிப்புகள் உங்களுக்காக

பொதுவாக இந்திய ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முகப்பருக்கள், பொலிவிழந்த முகம், சருமத்தில் சுருக்கம் போன்றவை இந்திய ஆண்களின் அழகையும், இளமைத் தோற்றத்தையும் பாதிக்கின்றன. அக்காலத்தில் ஆண்கள் அழகின் மீது அக்கறை காட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்களது மாசற்ற சுற்றுச்சூழல் தான். ஆனால் இப்போதோ மாசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம் தான். ஆகவே இக்காலத்தில் ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அக்கறையின்றி இருந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வேண்டியது தான். இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்க தினமும் பின்பற்ற வேண்டியது என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம். அப்பட்டியல் பின்வருமாறு

தண்ணீர்

சருமத்தின் சிறந்த நண்பன் தண்ணீர் தான். சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நேச்சுரல் ஸ்கரப் காற்று மாசுபாட்டினால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறது. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், கெமிக்கல் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் நீங்குவதோடு, முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து, முகம் அழகாக காட்சியளிக்கும்

. சன் ஸ்க்ரீன் 

ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையின் காரணமாக சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குகின்றன. இப்படியே சூரியக்கதிர்கள் சருமத்தைத் தாக்கினால், சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி சருமம் கருமையாவதோடு, சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் முன் ஆண்கள் சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நல்ல SPF சன் ஸ்க்ரீன் லோசனை கை, கால்களுக்கு தடவிக் கொள்ள வேண்டும்.

  தொடரும்

Thursday, 28 July 2016

ஒருவர் மட்டும் பேசட்டும்

நீ பேசு அல்லது
உன் அழகு பேசட்டும்

இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது

ஒருவர் மட்டும் பேசட்டும்

நீ பேசு அல்லது
உன் அழகு பேசட்டும்

இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது

சில பெண்களுக்கு ஏற்படும் மீசைப் பிரச்சனைக்கான தீர்வு

சில
பிரச்னையை மிகவும் கவனமுடன் கையாள்வது நல்லது. முகம், கை, கால்களில் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து விடுவது தான் அனைத்தப் பெண்களும் செய்யும் மிகப் பெரிய தவறாகும். இதனால் முன்பை விட முடி இன்னும் வேகமாக வளர்ந்து விடும். அத்துடன் தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து வந்தால் அதனால் தோலுக்கும் ஆபத்து வரலாம். அதாவது தோல் தடித்து தனது அழகை முழுவதுமாக இழந்து விடும். பிறகு இதற்கு என்ன தான் உபாயம் வாருங்கள் பார்ப்போம். ‘ப்யூனிக்’ என்று ‘மாக்கல்’ போன்ற அமைப்பு கொண்ட ஒரு கல் உள்ளது. அது கொஞ்சம் சொர சொரப்பாக இருக்கும் அழகுக் கடைகளில் கிடைக்கும். அதன் எடை மாக்கல் போலக் கனமாக இருக்காது. அந்தக் கல்லினால் உடம்பைத் தேய்த்து வந்தால், முடி வளர்ச்சி தடைபட்டு, நாளடைவில் தோல் மிகவும் வழ, வழப்பாக மாறிவிடும். ஒரு வேளை இந்தக் கல் கிடைக்கவில்லை என்றால் சுரக் குடுக்கையை உலர வைத்து, அதனை உடம்பில் (சோப்புப் போட்டுத் தேய்த்துக் கொண்டு) தேய்த்தாலும் முடி வளர்வது குறையும். இது தவிர கொஞ்சம் வசதியான பெண்களாக இருந்தால் ஆவிக் குளியல் எடுக்கலாம். இந்த ஆவிக் குளியல் பல வழிகளில் நன்மைகளை செய்யக் கூடியது. ஆவிக் குளியல் சரும வியாதிகளைப் போக்கும் என்று அண்மைக் காலமாக நம்பப் படுகிறது. வெயில் காலங்களில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் சமயத்தில் அதில் இருக்கும் நீர் ஆவியாகி விடுகிறது. வியர்வையில் உள்ள உப்புக்கள், உடம்பின் மேல் பகுதி தோலின் மீது படிந்து விடுகிறது. அடிக்கடி தோலை சுத்தம் செய்யாவிடில் தோல் சொர சொரப்பாக ஆகி விடும். அதனால் தோலின் இயற்கைச் சுரப்பியான எண்ணெய்ப் பசை, மேல் தோலுக்கு வர முடியாதபடி துளைகள் நன்றாக அடைத்துக் கொண்டு விடும். இந்த நிலையில் அடிக்கடி ஆவிக் குளியல் செய்தால் அத்துளைகள் நன்றாக விரிந்து கொடுக்கும், தோலும் சொரசொரப்பாக இருக்காது. மெருகுடன் காணப்படும்.

Wednesday, 27 July 2016

அப்துல்கலாம் பென்மொழிகள்

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!மழையில் பெரும்பாலான பறவைகள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கிச் செல்லும்! ஆனால் கழுகு மழை மேகங்களுக்கும் மேலே பறந்து தன்னை நனையாமல் காத்துக் கொள்ளும்!  சிக்கலை திறமையுள்ளோர் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை இது காட்டுகிறது!சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!கனவு நனவாக வேண்டுமெனில்....,  கனவு காணுங்கள்!மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே!ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!வானத்தை நோக்குங்கள்! நாம் தனியாக இல்லை! பிரபஞ்சமே கனவை நனவாக்கும் உழைப்பாளிகளுக்கு சிறந்ததைத் தர நட்புடன் காத்திருக்கிறது!அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!சிந்தனை செய்யுங்கள்..., அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!ஈடுபாடின்றி வெற்றி இல்லை!  ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை!