Wednesday, 27 July 2016

அப்துல்கலாம் பென்மொழிகள்

முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!மழையில் பெரும்பாலான பறவைகள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கிச் செல்லும்! ஆனால் கழுகு மழை மேகங்களுக்கும் மேலே பறந்து தன்னை நனையாமல் காத்துக் கொள்ளும்!  சிக்கலை திறமையுள்ளோர் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை இது காட்டுகிறது!சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!கனவு நனவாக வேண்டுமெனில்....,  கனவு காணுங்கள்!மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே!ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!வானத்தை நோக்குங்கள்! நாம் தனியாக இல்லை! பிரபஞ்சமே கனவை நனவாக்கும் உழைப்பாளிகளுக்கு சிறந்ததைத் தர நட்புடன் காத்திருக்கிறது!அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த லட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!சிந்தனை செய்யுங்கள்..., அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!ஈடுபாடின்றி வெற்றி இல்லை!  ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை!

No comments:

Post a Comment