தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும், தனி நாடாளுமன்றக்குழு அமைக்க கோரியும் நான் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேர் .பின் பேசியது
அப்போது தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவாக விளக்கினேன்.
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பணிகளில் முழுக்க முழுக்க வெளிமாநில அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தனி நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி, இது தொடர்பான மனுவையும் அவரிடம் வழங்கினேன்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் இது தொடர்பாக மாநிலங்களவை மற்றும் மக்களவைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment